(UTVNEWS | INDIA) -ஒத்த செருப்பு படம் மூலம் தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு கொண்டு சென்ற பார்த்திபன், அடுத்த படத்திலும் புது முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தினார். இதில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும். பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் கலந்துரையாடுவார். இந்த படத்தை திரையுலகினர் பலரும் பாராட்டினர்.
![இரவின் நிழல் பட போஸ்டர் இரவின் நிழல் பட போஸ்டர்](https://img.maalaimalar.com/InlineImage/202001011157032667_1_ini421._L_styvpf.jpg)
இந்நிலையில், பார்த்திபன் அடுத்ததாக இயக்கி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு ‘இரவின் நிழல்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் முழுவதும் ஒரே ஷாட்டில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
ஆசியாவில் இது போன்ற முயற்சியை எடுக்கு முதல் இயக்குனர் பார்த்திபன் தான். இப்படத்தின் தலைப்பை இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டார்.