அரசியல்உள்நாடு

அக்கரைப்பற்றில் ACMC யின் தேர்தல் பிரச்சார காரியாலயங்களை திறந்து வைத்தார் ரிஷாட் எம்.பி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான காரியாலயங்கள் திறப்பு விழாவும், முதலாவது மக்கள் சந்திப்பும் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த காரியாலயங்களை திறந்து வைத்தார்.

இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் உட்பட முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள், உலமாக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

Related posts

A\L பரீட்சைக்கு சென்ற காதலி மீது அசிட் வீசிய காதலன்

வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை – CID கண்காணிப்பில்

தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி