உள்நாடு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை 24 ஆம் திகதி திறப்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) மீண்டும் திறக்கப்படும் என உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் எம்.மனேஜ் தெரிவித்துள்ளார்.

இதனால், அனைத்து மாணவர்களும் திங்கட்கிழமை (23) தங்களது விடுதிகளுக்கு வருமாறு பேராசிரியர் பத்மலால் எம்.மனேஜ் குறிப்பிட்டுள்ளார்.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து கடந்த 12ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையில், அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

15 பயங்கரவாத அமைப்புகளுக்குத் தடை – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு – முழு விவரங்கள் இணைப்பு

editor

ஆர்.ஆர் இன் உடலுக்கு நீதிபதி இளஞ்செழியன், அமைச்சர் டக்ளஸ் உள்ளிட்டவர்கள் அஞ்சலி!