உள்நாடுபிராந்தியம்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் காணாமல் போயுள்ளனர்

வாழைச்சேனையில் நிலவிவரும் மழையுடான காலநிலை காரணமாக ஏற்பட்ட திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் காணாமல் போயுள்ளனர்.

வாழைச்சேனை புலிப்பாஞ்சிக்கல் பகுதியில் நேற்று (25) மாலை இரண்டு பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சந்திவெளி பகுதியைச் சேர்ந்த 52 மற்றும் 71 வயதுடைய இருவரே இவ்வாறு காணாமல் போய்யுள்ளனர்.

இந்த இருவரும் காய்கறிகளை சேகரித்துவிட்டு வயல்களில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, புலிப்பாஞ்சிகல் ஓயாவின் அடித்துச் செல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காணாமல் போன இருவரையும் கண்டுபிடிக்க வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அரிசி தட்டுப்பாடு – ஜனவரி 10 ஆம் திகதி வரை இறக்குமதி செய்ய தீர்மானம்

editor

பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது

உயர்தரத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர்களுக்கும் புலைமை பரிசில்!