சூடான செய்திகள் 1

விபத்தில் பாதசாரி பலி

(UTV|COLOMBO)-பயாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதகம பகுதியில் இடம்பெற்ற விபத்து பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாத்துவ பகுதியை நோக்கி பயணித்த வேன் ஒன்று பாதை ஓரமாக நடந்து சென்ற ஒருவரை மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (05) இரவு 7.15 மணியவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுகம, எலேதுல வத்த பகுதியை சேர்ந்த 51 வயதுடைய வேலு சொய்ஸா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் வேனின் ஓட்டுனரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

 

 

 

 

Related posts

10 மணி நேரம் நீர் விநியோகம் தடை

“நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும்” – ரிஷாட் நம்பிக்கை!

புதிய மின்சார சட்டம்: ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைத்து, அமைச்சருக்கு கூடிய அதிகாரம் : சஜித் குற்றச்சாட்டு