சூடான செய்திகள் 1

விண்ணப்பப்படிவங்களை விநியோகிக்கும்  பணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்

(UTV|COLOMBO) 2019 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தத்திற்கு அமைவான விண்ணப்பப்படிவங்களை வீடுகளுக்கு விநியோகிக்கும்  பணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை ஜூன்  மாதம் 2 ஆம் திகதி முதல் மீளப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேற்படி  கிராம சேவகர்கள் ஊடாக இந்த விண்ணப்பப்படிவங்களை கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts

மோல் சமிந்தவின் உதவியாளரான பெண்ணொருவர் கைது

தனியார் பேரூந்து ஊழியர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பில்

25 பில்லியன் ரூபா செலவில் உயரமான மேம்பாலம் கொழும்பில் நிர்மாணிப்பு…