உள்நாடு

வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு

(UTV | கொழும்பு) – வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன் தொண்டமனாறு கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரை, நேற்று (24) மாலை முதல் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

இன்று (25) காலை அவர் தொண்டைமானாறு கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழில் காணாமல் போன பிரதேச சபை ...

இலங்கநாதன் செந்தூரன் (37) ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் யாழில் மக்களுக்கான உதவிப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டத்துக்கு அவுஸ்திரேலியா பாராட்டு

editor

சுஜீவ எம்.பி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி

editor

முதலாவது பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டம் இன்று