உள்நாடுவணிகம்

மத்திய வங்கியின் சலுகை காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) – காலத்தைக் கடந்துள்ள 5 இலட்சத்திற்கு குறைந்த அளவிலான காசோலைகள் அனைத்தும் இம்மாதம் 15 ஆம் திகதி வரை நீட்டிக்க இலங்கை மத்திய வங்கி  தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு தரப்பினரின் இன்னல்களை கருத்திற் கொண்டு, வணிக மற்றும் தனிநபர்களின் நிவாரணத்திற்காக வழங்கப்பட்டிருந்த காலத்தை நீட்டிக்க இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

அத்தகைய நபர்கள் மற்றும் வணிகங்கள் கடன் நிவாரணம் மற்றும் மூலதனக் கடன்களுக்கு 4 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கால வரையறை ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாணவ போக்குவரத்து சேவைக்கான கட்டணங்களும் அதிகரிப்பு

சில பகுதிகளில் 100 மி.மீற்றர் வரையான பலத்த மழை

இராணுவப் பயிற்சி : 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்