உள்நாடு

ரஷ்யாவின் Sputnik V செவ்வாயன்று தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) – ரஷ்யாவின் Sputnik V கொவிட் தடுப்பூசியின் மற்றுமொரு தொகுதி எதிர்வரும் செவ்வாய் கிழமை இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதன்படி அடுத்த கட்டமாக 185,000 தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் ​மேலும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் Sputnik V கொவிட் தடுப்பூசியை அவசர தேவைக்காக பயன்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில், Sputnik V கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி மே மாதம் 3 ஆம் திகதி இரவு இலங்கையை வந்தடைந்தது.

அதனடிப்படையில் முதல் தொகுதியில் 15,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றது.

அதற்கமைவாக 7 மில்லியன் தடுப்பூசிகளை 69.65 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு

editor

ஒரு வருடத்திற்கு சம்பளம் பெறாமல் தமது பதவிகளை தொடர அமைச்சர்கள் இணக்கம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அநுரவை சந்தித்தார்

editor