ஓடும் ரயிலில் ஏற முயன்ற வயோதிபர் ஒருவர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்துள்ள சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியான ரிதிதென்னை ரயில. நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில் ரிதிதென்னை நிலையத்தில் நிறுத்தி விட்டு மீண்டும் செல்லும்போது வயோதிபர் ஒருவர் ஏற முற்பட்டபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில், காயமடைந்த 60 வயதுடைய நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வயோதிபரின் இடது கால் சத்திர சிச்சையின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-எச்.எம்.எம்.பர்ஸான்