உள்நாடு

“..’ரணில் ராஜபக்ஸ’ ராஜபக்ஸவை விட சர்வாதிகாரி..” – ஹிருணிகா

(UTV | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று காலை 11.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார்.

பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஹிருணிகா பிரேமச்சந்திர;

“.. விசாரணையின் தன்மை குறித்து தமக்கு தெரிவிக்கப்படவில்லை. அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது முயற்சித்து வருகிறார்.

ரணில் விக்கிரமசிங்கவே மக்கள் போராட்டங்களின் பலனைப் பெற்று நாட்டின் ஜனாதிபதியானார். “ரணில் ராஜபக்ஸ” ராஜபக்ஸவை விட சர்வாதிகாரி..” என ஹிருணிகா மேலும் கூறினார்.

Related posts

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு கொடுக்கும் விவகாரம் – நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களுடன் தொடர்புடையது.

சீனி, தேங்காய் எண்ணெய் ஊழல்களை மறைக்கவா ரிஷாதின் கைது? [VIDEO]

மேலும் 288 இலங்கையர்கள் தாயகத்திற்கு