விளையாட்டு

மொஹமட் ஹபீஸுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

(UTV|PAKISTAN)-பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் மொஹமட் ஹபீஸுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

மறு மதிப்பீட்டு நடவடிக்கையின் பின்னர் அவருக்கு எதிரான தடை நீக்கப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் போது, மொஹமட் ஹபீஸ் சட்டவிரோத பந்துவீச்சு பாணியை கடைப்பிடித்து பந்துவீசுவதாக தெரிவித்து அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

இதன்பின்னர் நடத்தப்பட்ட மறுமதிப்பீட்டின் போது, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் பந்துவீச்சு விதிமுறைகளுக்கு உட்பட்ட வகையில் அவருடைய பந்துவீச்சு பாணி அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஒலிம்பிக் அங்கீகாரத்தை இழந்த பெலருஸ் பயிற்சியாளர்கள்

இலங்கை அணி சகல துறைகளிலும் திறமை காட்டியுள்ளது – தினேஷ் சந்திமால்

232 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இலங்கை