உள்நாடுசூடான செய்திகள் 1

மைத்திரிபால செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து பணியாற்றுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதானவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

தம்புள்ள கல்வி வலய அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் 10 முறைப்பாடுகள்