கிசு கிசு

மைத்திரிக்கு வக்காளம் வாங்கும் ஜோன்ஸ்டன்

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பின் முதலாம் வரிசையின் முதலாவது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுத்த கோரிக்கைக்கு, அமைய குறித்த இந்த ஆசனம் மைத்திரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதிக்காக ஆளும் கட்சி பக்கத்தில் நான்காவது வரிசையில் முதலாவது ஆசனமே வழங்கப்பட்டிருந்தது.
எனினும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் கோரிக்கைக்கமைய இவ்வாறு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு பாராளுமன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் நான்காவது வரிசையின் முதலாவது ஆசனமே வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ரிஷாதின் மைத்துனர் துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்த யுவதி இன்னும் கன்னிப்பெண் [VIDEO]

பிரதமரின் பிறந்த நாள் நிகழ்வு கொண்டாட்டம்…

ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் கட்சிகள்?