சூடான செய்திகள் 1

மாவனெல்லையில் உள்ள மேலதிக வகுப்புக்கள் கட்டிடமொன்றில் தீ விபத்து

(UTV|COLOMBO) நேற்றிரவு மாவனெல்லை நகரில் பல விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள அடுக்கு மாடி கட்டிடமொன்றின் மேல் மாடியில் ஏற்பட்ட தீப்பரவல் மற்றைய கட்டிடங்களுக்கு பரவுவதற்கு முன்னர் மாவனெல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினரால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த இந்த கட்டிடத்தின் மேல் மாடியில் மேலதிக வகுப்புக்கள் இடம்பெற்று வருவதாகவும் குறித்த இடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் , சம்பவம் தொடர்பில் மாவனெல்லை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Related posts

தேசிய அரசாங்கம் ஸ்தாபிப்பது குறித்து கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இன்று(06) பேச்சுவார்த்தை

இன்று நள்ளிரவு 12 மணி முதல், அவசரகால சட்டம்

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு