உள்நாடு

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

(UTV | கொழும்பு) – கண்டியில் இருந்து பதுளை நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயில், வட்டவளை ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று(11) காலை தடம்புரண்டுள்ளது.

இதன் காரணமாக, மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த ரயிலை தடமேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இணைய வழியில்

அரச ஊழியர்களை மட்டுப்படுத்தி சேவைக்கு அழைக்க கோரிக்கை

IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற நபருக்கு கொரோனா உறுதி [UPDATE]