உள்நாடு

மத்திய வங்கி ஆளுநரானார் கப்ரால்

(UTV | கொழும்பு) – மத்திய வங்கி ஆளுநராக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநருமான அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான நியமன கடிதத்தை ஜனாதிபதி இன்று (15) வழங்கி வைத்தார்.

மத்திய வங்கி ஆளுநராகவிருந்த W.D.லக்‌ஷ்மன் பதவி விலகியதை அடுத்து, கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கப்ரால் 9 ஆண்டுகள் மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்துள்ளார். இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது புதிய ஆளுநராக இன்று பதவியேற்றுள்ளார்.

Related posts

கலாநிதி ஷிரான் உபேந்திர தெரணியகல காலமானார்

இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு பஹ்ரைன் தடை

புத்தாண்டின் சுப நேரங்கள்