வகைப்படுத்தப்படாத

பொலிஸ் OIC க்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டு சிக்கிக் கொண்ட நபர்

(UTV|KALUTARA)-பேருவளை பொலிஸ் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாடு திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த வேனை விடுவிப்பதற்கு 25,000 ரூபா பணத்தை, பொலிஸ் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரிக்கு சந்தேகநபர் இலஞ்சமாக கொடுக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் என்பதுடன், அவர் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

India’s Vijay Shankar ruled out of World Cup with broken toe

EU Counter-Terrorism Coordinator here

அலோசியஸ் மற்றும் கசுன் நீதிமன்ற முன்னிலையில்