அரசியல்உள்நாடு

பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை 1,259 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை) 1,259 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 342 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 873 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 13 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 31 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

Related posts

பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து

உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நாளை மறுதினம்

சூரி­ய­ கி­ர­க­ணத்தை வெற்­றுக் கண்களால் பார்ப்பது பாதிப்பு