உள்நாடுவணிகம்

பேருவளை மீன்பிடி துறைமுக செயற்பாடுகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவலையடுத்து, பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் முன்னர் போன்று மீண்டும் இன்று (08) முதல் மீன் கொள்வனவில் ஈடுபட முடியுமென பேருவளை துறைமுக முகாமையாளர் தெரிவித்திருந்தார்.

சுமார் 75 தினங்கள் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாதிருந்த நிலையில், சுகாதார வழிமுறைகளுக்கமைய, பொதுமக்கள் மீன்பிடி துறைமுகத்துக்கு வருகைதர முடியும் என அறிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அதிகாலை 5 மணி தொடக்கம் 9 மணிவரையான காலப்பகுதியில் மீன் கொள்வனவு செய்ய முடியுமென, துறைமுக முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

மட்டக்களப்பில் பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு பிரத்தியேக பஸ் சேவை ஆரம்பம்

editor

மேல்மாகாண பாடசாலைகள் குறித்து இன்று தீர்மானம்

அரச நிறுவனங்களில் மின்சாரம், எரிபொருளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் சுற்றறிக்கை