உள்நாடு

புதுக்குடியிருப்பு பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு

(UTVNEWS | MULLAITIVU) – முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த மோட்டார் குண்டுகள் மீட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் 81 மில்லி மீற்றர் கொண்ட 13 பெட்டிகளை மீட்டுள்ளனர்.

குறித்த வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருந்த நிலத்தின் உரிமையாளர் இது தொடர்பில் தகவல் அறிந்து பொலிஸாருக்கு வழங்கிய உத்தரவுக்கு அமையவே முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய இவை மீட்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்க்கப்பட்ட பல பெட்டிகள் சிதைவடைந்த நிலையில் இருந்ததாகவும், அவை விடுதலை புலிகளினால் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Related posts

கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி

ஓய்வூதியம் பெறுவோருக்கு இலவச பயணச் சீட்டு வழங்கும் நிகழ்வு ஆரம்பம் [PHOTO]

போட்டி பரீட்சையை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – கல்வியமைச்சின் அறிவிப்பு