சூடான செய்திகள் 1

புதிய கூட்டணி உருவானது; தெரிவானார் ஜனாதிபதி வேட்பாளர்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் சிறிய கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் புதிய கூட்டணியின் சார்பில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக முன்னணியாக உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியின் யாப்பு தொடர்பாக பங்காளி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

போகம்பர கலாசார நிலையத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது பிரதமர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

புதிய கூட்டணியின் சார்பில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சரியான நேரத்தில் அவரது பெயரை அறிவிப்போம்.

Related posts

எல்பிட்டிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த முடியாது- பெருந்தோட்ட கம்பனிகள்

ஜனாதிபதி சீனா விஜயம்