சூடான செய்திகள் 1

புகையிரதத்துடன் மோதி இத்தாலி பிரஜை உயிரிழப்பு

(UTV|COLOMBO)-கல்கிஸ்ஸ பிரதேசத்தில் புகையிரதத்துடன் மோதிய வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புகையிரத வீதிக்கு குறுக்காக சென்ற குறித்த நபர் அளுத்கமயில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த பரிசோதனை புகையிரதத்துடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த நபரை களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளார்.

67 வயதுடைய இத்தாலி நாட்டுப் பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

 

 

Related posts

உலக வாழ் இந்து மக்களால் இன்று (04) மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது

உடவளவை நீர்த்தேத்தின் திறக்கப்பட்ட இரண்டு வான் கதவுகள் மூடல்

நட்டயீடு வழங்கும் அலுவலகத்துக்கான சட்ட மூல இரண்டாம் வாசிப்பு…