உள்நாடு

பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு 2.5 மில்லியன் நன்கொடை

(UTV | கொழும்பு) – பாகிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை (03) கொடூரமாக தாக்கப்பட்டு எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்ப நலனுக்காக நன்கொடை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, அவரது மனைவி மற்றும் பிள்ளைகளின் நலனுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊழியர் நலன்புரி நிதியத்திலிருந்து 2.5 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான பிரேரணையை தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் மாபெரும் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு

editor

கொவிட் தொற்றாளர்களை வீட்டில் வைத்து கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

தேர்தலை கண்டு அஞ்சும் கூட்டமல்ல நாங்கள் – மஹிந்த