அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீரவின் திடீர் மரணத்தால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்றத்தால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசியலமைப்பின் 66(அ) பிரிவின் விதிகளின்படி, 2025 ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி முதல் பத்தாவது பாராளுமன்றத்தில் ஒரு இடத்திற்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக, பாராளுமன்றத்தின் பதில்
பொது செயலாளர் சமிந்த குலரத்ன, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.

கோசல நுவான் நேற்று (06) திடீர் மாரடைப்பு காரணமாக தமது 38 வயதில் காலமானார்.

Related posts

மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவு

ஹபரனை விவகாரம் : விசாரணை குழு நியமனம்

பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய இருவர் கைது