சூடான செய்திகள் 1

பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை…

(UTV|COLOMBO)-ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டிபன வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் பாடசாலை மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இசுறு சந்தீப எனும் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

நேற்று (02) மாலை 4.20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை வகை பிரித்துத் தருமாறு கொழும்பு மாநகர சபை கோரிக்கை

குருணாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் மக்கள் காங்கிரசில் இனைவு

சுகாதார துறையிலுள்ள ஊழியர்களுக்கு 2886 மோட்டார் சைக்கிள்கள்…