உள்நாடு

பல்கலைக்கழக பதிவுக்கான கால எல்லை நீடிப்பு

(UTV| கொழும்பு) – 2020ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான பல்கலைக்கழகங்களில் பதிவு செய்வதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால எல்லை ஏப்ரல் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க விடுத்துள்ள அறிக்கையில், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலமையைக் கருத்தில் கொண்டு 2020 பல்கலைக்கழக அனுமதிக்கான பதிவை எதிர்பார்த்துள்ள எந்தவொரு மாணவரும் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் இந்த கால எல்லையை மேலும் நீடிப்பதற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஒரு குடம் நீருக்காக 200 படிகள் ஏறி இறங்கும் கொலனி மக்கள்

உலக சந்தையில் சரிந்தது தங்கம்

மத்திய வங்கி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த இளைஞன் பலி