உள்நாடு

பசில் தலைமையில் முதல் கூட்டம் இன்று

(UTV | கொழும்பு) –   உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு முதல் முறையாக இன்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் கூடுகிறது.

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நியமிக்கப்பட்டது.

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைச் சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பில் முறையான பொறிமுறையொன்று உடனடியாகத் தயாரிக்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை 98 ஆக அதிகரிப்பு

🛑 Breaking News = துமிந்த சில்வாவுக்கு கோட்டா வழங்கிய பொதுமன்னிப்பு ரத்து!

வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை

editor