வகைப்படுத்தப்படாத

நைஜீரியா நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி சுட்டுக்கொலை

(UTV|NIGERIA)-நைஜீரியா நாட்டின் விமானப்படை மற்றும் ராணுவ தளபதியாக பதவி வகித்தவர் அலெக்ஸ் படேஹ். 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் விமானப்படை தளபதியாக பதவியேற்ற இவர், பின்னர் முப்படைகளின் தளபதியாக 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். 13-7-2015 அன்றுவரை இந்த பதவியில்இருந்தார்.

பணி ஓய்வு பெற்ற நிலையில் தனது பண்ணையில் இருந்து நேற்று மாலை காரில் சென்றபோது அபுஜா-கெஃபி நெடுஞ்சாலையில் அவரது காரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் அலெக்ஸ் படேஹ்-வை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும், இந்த தாக்குதலில் மேலும் இருவர் உயிரிழந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

 

 

 

 

Related posts

වැස්සේ අඩු වීමක්

ශ්‍රී.ල.පො.පෙ නව දේශපාලන සන්ධානයකට ගිවිසුමකට අත්සන් තැබීම අද

මරණ දණ්ඩනය පිලිබඳ අග්‍රාමාත්‍යවරයා තානාපතිවරුන් හමුවී කරුණු දක්වයි.