நாடு தழுவிய மின்வெட்டு காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் ஜெனரேட்டர்களும் இயங்குவதை நிறுத்திவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு நடந்தது ஏன் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் ஒரே நேரத்தில் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறை.