உள்நாடு

நாளை முதல் 18 மணித்தியால நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – வத்தளையின் சில பிரதேசங்களில் நாளை(31) முதல் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை(31) இரவு 10 மணி முதல் ஏப்ரல் 1 ஆம் திகதி மாலை 4 மணி வரை 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி வனவாசல, ஒலியமுல்ல, வத்தளை – நீர்கொழும்பு வீதி, எவரிவத்த வீதி, தெலங்கபத்த, மீகஹவத்த, ஹேகித்த, பல்லியாவத்த, வெலியமுன வீதி, பலகல, கலஹாதுவ, மரதான வீதி, எலகந்த மற்றும் ஹெந்தல வீதியின் ஒரு பகுதி ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனஈர்ப்பு போராட்டம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா விடுவிப்பு

editor

பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசை கையளிக்க தயார் – ஜனாதிபதி