உள்நாடு

நாட்டை முடக்குவதற்கு இதுவரையில் தீர்மானம் இல்லை

(UTV | கொழும்பு) – கொவிட்-19 பரவல் நிலைக்கு மத்தியில், நாட்டை முடக்குவதற்கு இதுவரையில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

வார இறுதியில், மாவட்டங்களுக்கு இடையிலான நடமாட்டங்களைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதையும், சுற்றுலாக்களை மேற்கொள்வதையும் தவிர்க்குமாறும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

நாட்டில் எதிர்வரும் நாட்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.

சித்திரைப் புத்தாண்டு காலத்தில், பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்காமையே இதற்கான காரணமாகும் என அவர் கூறினார்.

இதேவேளை, ஏதாவது ஒரு இடத்தில் குறிப்பிடத்தக்களவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால், அப்பகுதியை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

பசில் ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்

மல்கம் ரஞ்சித் வத்திக்கானை சென்றடைந்தார்