உள்நாடுவிளையாட்டு

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இலங்கை வருகை

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் மூன்று நாள் பயணமாக இன்று (03) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இலங்கையில் ஒரு விசேட திட்டத்தை செயல்படுத்த வந்ததாகவும், அது குறித்த விபரங்களை பின்னர் வெளியிடுவேன் என்று நம்புவதாகவும் விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு ஜொன்டி ரோட்ஸ் தெரிவித்தார்.

இன்று காலை 5.25 மணிக்கு இந்தியாவின் மும்பையிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் (UL-148) மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஜொன்டி ரோட்ஸ்க்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 123 பேர் கைது

பொத்துவில் விருந்தினர் விடுதி ஒன்றில் பெண் ஒருவரை கொன்ற நபர் விடுதி

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவிப்பு