உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 417 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 417 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய, இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 47,240 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், நேற்று (03) கம்பளையில் 112 பேரும், கண்டியில் 52 பேரும், மாத்தளையில் 47 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாட்டை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதற்கு முயற்சித்த 165 பேரும் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

 

Related posts

ரணில் தொடர்பில் போலிப்பிரசாரம் – வன்மையாக கண்டிக்கிறோம் – ருவான் விஜேவர்த்தன

editor

இந்தோனேசியாவுக்கு அடித்துச்செல்லப்பட்ட இலங்கை படகுகள்

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்