அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி அநுர தெரிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும் – மனோ எம்.பி

நாட்டில் ஊழல் தொடர்பான வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களை நிறுவுவதை ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் ஊழலுக்கு எதிரான முயற்சிகளை வரவேற்கின்றேன்.

பொலிஸ், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, சட்டமா அதிபர் மற்றும் நீதித்துறை ஆகியவை குடியரசு ஜனநாயக நாட்டில் மக்கள் நம்பிக்கை வைக்கும் நிறுவனங்களாகும்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கோப்புகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மீண்டும் திறந்து, இம்மாத இறுதியிலும் பெப்ரவரியிலும் வழக்குகளை தாக்கல் செய்யும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

“இலஞ்ச ஆணைக்குழுவுக்கு (அதன் சட்ட அதிகாரங்களை வலுப்படுத்துதல் உட்பட), சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அதிக ஆதாரங்களை வழங்குவதன் மூலம் தேக்கநிலையை நீக்க வேண்டும்.

மேலும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை நிறைவேற்றுவதற்கு அதிக ஆதாரங்களை வழங்க வேண்டும்.

அதேவேளை, ஊழல் தொடர்பான வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களை நிறுவுவதையும் ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டும், இதனால் வழக்குகள் தினசரி அடிப்படையில் விசாரிக்கப்பட்டு முடிவுகளை நோக்கிச் செல்லும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

புத்தளம் அறுவைக்காட்டு குப்பை தொடர்பில் பாராளுமன்றத்தில் முக்கிய பேச்சு: பிரதமரை சந்திப்பது எனவும் முடிவு!

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு பிணை

இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு விசேட வரி