அரசியல்உள்நாடு

ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய சண்முகம் குகதாசன் எம்.பி

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் ஜனாதிபதி ரணில் விகிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற சிக்கல்கள் குறித்தும் அதற்குரிய தீர்வுத்திட்டங்கள் குறித்தும் இங்கு அவர் கலந்துரையாடியுள்ளார்.

நேற்று (31) இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர், மக்களை சந்தித்த அவர், தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை முன்னெடுக்கும் அதேவேளை அதற்கு சமாந்தரமாக அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு அமைவாக செயற்பட உள்ளதாக, குறிப்பிட்டிருந்தார்.

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரர் இரா. சம்பந்தனின் மறைவின் பின்னர் கடந்த ஜூலை 09ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட சண்முகம் குகதாசன், சில நாட்களுக்கு முன்னர் அரசாங்கத்திடம் இருந்து ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீட்டைப் பெற்று பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிக்காக ஒதுக்கியுள்ளார்.

ஏனைய அபிவிருத்திகளுக்காக மேலும் ரூ. 3 கோடி நிதியை கோரியுள்ளார்.

Related posts

இந்திய பிரதமர் இலங்கை வருகை – கொழும்பில் மூடப்படும் வீதிகள் குறித்து பொலிஸார் வௌியிட்ட புதிய அறிக்கை

editor

தனிமைபடுத்தல் தொடர்பிலான அறிவித்தல்

மேலும் 79 பேர் குணமடைந்தனர்