உள்நாடுசூடான செய்திகள் 1

சிகரெட் மற்றும் மதுபானம் விலை அதிகரிப்பு

நாளை (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலையை அதிகரிக்க இலங்கை புகையிலை நிறுவனம் தீர்மானித்துள்ளது.

கலால் வரி அதிகரிப்புடன் சிகரெட் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நான்கு வகையான சிகரெட்டுக்களின் விலை 5 மற்றும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலைகளை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மனுபானங்களின் விலைகளை 6 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

Related posts

“திலினியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த மஹிந்த” பகீர் தகவல்

மதுவரித் திணைக்களத்தால் 754 பேர் கைது

இதுவரை 786 கடற்படையினர் குணமடைந்தனர்