அரசியல்உள்நாடு

சபாநாயகருக்கு அர்ச்சுனா கடிதம் – பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்யப்போவதாக எச்சரிக்கை

யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனது பாராளுமன்ற உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் பாராளுமன்ற சபாநாயகருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரத்தை பெறமுடியாமலிருப்பது குறித்த தனது ஆழ்ந்த கரிசனையை வெளியிடுவதாக அந்த கடிதத்தில் தெரிவித்துள்ள அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற அடிப்படையில் எனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு இந்த உரிமை மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் அலுவலகம் அறிவித்தது போல இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த விவகாரத்திற்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை சரி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை சபாநாயகர் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அர்ச்சுனா இந்த விடயத்திற்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தின் அமர்வுகளில் இருந்து வெளிநடப்பு செய்ய தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யாழ்.மாவட்ட செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள்!

இதுவரை 411 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

பிரதியமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு சங்க உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல்

editor