அரசியல்உள்நாடு

கொழும்பு துறைமுக நகரத்தின் மெரினா டெவலப்மென்ட் திட்டம் – திறந்து வைத்த அமைச்சர் விஜித ஹேரத்

கொழும்பு துறைமுக நகரத்தின் புதிய மேம்பாட்டுத் திட்டம் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஷென்ஹோங் ஆகியோரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மெரினா டெவலப்மென்ட் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம், கடல் சுற்றுலாவை மேம்படுத்தும்.

சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான கப்பல்களை நங்கூரமிடவும், தேவையான சுற்றுலா வசதிகளை வழங்கவும் உதவும். மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த திட்டத்தில், ஏராளமான கடல் உணவகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

இந் நிகழ்வில் போது துறைமுக நகர திட்டத்தின் தலைவர் ஹர்ஷ அமரசேகர மற்றும் அவரின் குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

கேகாலை தம்மிக்கவின் கொரோனா பானத்திற்கு அனுமதி

துறைமுகநகர சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற வியாக்கியானத்தை சபாநாயகர் அறிவித்தார்

பிரதமரின் விலகல் – உண்மையில்லை என்கிறது பிரதமர் ஊடகப் பிரிவு