உள்நாடு

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை(03) காலை 8.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (04) அதிகாலை 2.00 மணி வரை 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்ஸ, கோட்டே, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளுக்கும், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகளுக்கும் இந்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்படும்.

அத்துடன், கொட்டிகாவத்தை – முல்லேரிய உள்ளுராட்சி சபை பகுதிக்கும், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பகுதிகளுக்கும் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

Related posts

அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஈரான் தூதுரகத்திற்குச் சென்று கையெழுத்திட்ட மஹிந்த, ஹக்கீம்!

தேசிய மக்கள் சக்தியின் பலம் நாளாந்தம் நலிவடைந்து வருகிறது – ரிஷாட்

editor