உள்நாடு

கொரோனாவுக்கு 1,239 பேர் இன்றும் சிக்கினர்

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,239 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 249,289ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,843 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 214,668 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஷானி – சுகத் : மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 17

பேருந்து சங்கங்கள் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது

ஊரடங்கு காலப்பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை