உள்நாடுவணிகம்

கொத்துரொட்டி, சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து கொத்து ரொட்டி மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை நாளை (29) முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொத்துரொட்டியின் விலையை 10 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின் விலையை 5 ரூபாவினாலும் அதிகரிக்கவுள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் கோதுமை மா கிலோவொன்றின் விலை 17 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் நேற்று அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளை பேருந்துகள் இயங்காது

மின்சாரத்தை துண்டிக்க மாட்டோம் – இலங்கை மின்சார சபை

காலிமுகத்திட ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தை சந்தித்தனர்