உள்நாடுசூடான செய்திகள் 1

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கொட்டாஞ்சேனை, பெனடிக்ட் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (10) இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களில் ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

43 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய குழுவைக் கண்டுபிடிக்க நான்கு பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Related posts

விமான நிலைய கழிப்பறையில் இருந்து தங்கம் மீட்பு

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை

பிரென்டிக்ஸ் : பதிவு செய்யாத ஊழியர்கள் கைது செய்யப்படுவர்