உள்நாடு

காலி முகத்திட ஆர்ப்பாட்டத்தில் ராப் பாடகர் ஷிராஸ் பலி

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலகுமாறு கோரி கோட்டை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

காலி முகத்திடலில் கூட்டத்தினருக்காக பாடிக்கொண்டிருந்த இலங்கையின் ராப் பாடகர் ஷிராஸ் நேற்று இரவு மாரடைப்பால் போராட்ட தளத்தில் உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன் அங்கு அவர் பாடிய பாடலின் பகுதி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.

கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் நான்காவது நாளாகவும் இன்று தொடர்கின்றது.

Related posts

இலங்கை வந்தார் யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம்.

அதிக விலையில் பாணை விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை.

கொரோனா : 8,000ஐ கடந்தது