உள்நாடு

காலிமுகத்திட ஆர்ப்பட்டக்காரர்களை அகற்றியமை குறித்து பாராளுமன்றத்தில் விவாதம்

(UTV | கொழும்பு) – காலிமுகத்திட ஆர்ப்பட்டக்காரர்களை அந்த இடங்களில் இருந்து அகற்றியமை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் நாளை (27) நடைபெற உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இன்று விவாதத்தை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், எரிபொருள் பிரச்சினை காரணமாக இன்று நாடாளுமன்றம் கூடி நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க முடியாமையினால் நாளை வரையில் பிற்போடப்பட்டுள்ளது.

Related posts

அம்பாறையில் வாகனங்கள் விபத்து: சிலர் வைத்தியசாலையில்

மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு அமுலுக்கு

நாளைய போட்டியில் களமிறங்கவுள்ள ஆஸி அணியினர்