உள்நாடுபிராந்தியம்

காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் பலி

அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பானாதரகம, தெமட்டகொல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) பெண்ணொருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பானாதரகம, தெமட்டகொல்ல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த பெண் தனது வீட்டின் முற்றத்தை தூய்மையாக்கும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் அம்பன்பொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள்

ஸ்புட்னிக் V தடுப்பூசியின் 2ம் செலுத்துகை நடவடிக்கை இன்று முதல்

முழுமையாக நீரில் மூழ்கிய தென்கிழக்கு பல்கலைக்கழகம்!