உள்நாடு

கடும் மழை – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

(UTV | கொழும்பு)- நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 200 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைவு

மிரிஹானவில் கைது செய்யப்பட்டோருக்கு மக்கள் சட்டத்தரணிகள் மன்றம் உதவும்

ராம‌ன், ர‌ஹ்மான் என்ற‌ க‌ருத்துக்க‌ள் எவ‌ர‌து ம‌ன‌தையாவ‌து புண்ப‌டுத்தியிருந்தால் ம‌ன்னிப்பு கேட்கிறேன்- முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி