உள்நாடுசூடான செய்திகள் 1

கடலில் நீராடச் சென்ற 4 பேர் நீரில் மூழ்கி பலி

(UTV|கொழும்பு)- வத்தளை திக்ஓவிட்ட கடலில் நீராடச் சென்ற 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

16, 20 மற்றும் 30 வயதுடைய மூன்று பெண்களும் 14 வயதுடைய சிறுவன் ஒருவனும் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மற்றுமொரு பெண் கவலைக்கிடமான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடராபில் ராகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி

கொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிப்புச் சம்பவம் (IMAGES)

இலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்த அலி சப்ரி அழைப்பு!