உள்நாடு

கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்

(UTV|கொழும்பு)- கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், கொழும்பு, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என அறிவித்துள்ளது.

இதன் காரணமாக இந்த கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, பேருவளை தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் கடல் அலை 2 தொடக்கம் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு பங்குச் சந்தை நாளை பூட்டு

RMV பரிவர்த்தனைகளுக்கான மின்னணு அட்டை வசதி

தேசபந்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையை வலுவற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!