உள்நாடுசூடான செய்திகள் 1

எரிபொருள் விநியோகஸ்தர்களிடம் 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க மற்றும் சாந்த சில்வா உள்ளிட்ட பணிப்பாளர்கள் குழு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளனர்.

இதன்போது, அவர்கள் சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தை அவமானப்படுத்தும் நோக்கில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை சீர்குலைக்க இந்த பிரதிநிதிகள் முயற்சிப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப் பெற்றிருந்தது.

அதன்படி, இந்தக் குழுவை இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய அமைச்சரவை நியமனம் கண்டியில்

வர்த்தக நிறுவனங்களின் தகவல் பெறும் கால எல்லை நீடிப்பு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின – அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் விபரம்